இந்தியா

மத்திய பட்ஜெட் 2024 ஆரம்பம்… முக்கிய அறிவிப்புகள் இதோ…

மத்திய பட்ஜெட் 2024 : இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளர். அதற்காக நேற்று (ஜூலை 22)இல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஏற்கனவே 5 முறை முழு பட்ஜெட் ஒருமுறை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று தொடர்ச்சியாக 7வது […]

#BJP 10 Min Read
Union Budget 2024

பிரதமரை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? 26ம் தேதி டெல்லி பயணம்.!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் ஜூலை 27-ஆம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த […]

#BJP 3 Min Read
pm modi - tn cm

கேரளாவில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு.! நோயின் அறிகுறிகள் என்ன?

நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிபா வைரஸ் தாக்கிய 14 […]

#Coimbatore 5 Min Read
Nipah virus in India

அதிர்ச்சி வீடியோ: நிலப்பிரச்சனை காரணமாக 2 பெண்களை உயிருடன் புதைத்த கொடூரம்!

மத்திய பிரதேசம்: சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் மண்களை கொட்டி இரு பெண்களை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ​​லாரியில் இருந்து மண் சரளை கொட்டி அவர்கள்  உயிருடன் புதைத்துள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த இரு பெண்களும் தனியார் நிலத்தில் வலுக்கட்டாயமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மங்காவா […]

3 Min Read
2 women - Madhya Pradesh

‘இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை’..! நிதிநிலை அறிக்கையில் தகவல்.!

டெல்லி : நாளை மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பொது பட்ஜெட்டானது தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். மேலும், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

All Party Meet 5 Min Read
Anandha Nageswaran

சிவனுக்கான கன்வார் யாத்திரை..! உச்சநீதிமன்றம் ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு.!  

டெல்லி: கன்வார் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளில் உரிமையாளர் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்ற மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது இந்து கடவுள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவதற்கு கங்கையில் இருந்து புனித நீர் எடுக்கும் ஆன்மீக நிகழ்வு இன்று முதல் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை எனும் பெயரில் தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் இந்த ஆன்மீக நிகழ்வு கங்கை ஆறும் ஓடும் மாநிலங்களில் நடைபெறும். இதற்கு வடமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். அண்மையில், […]

#Madhya Pradesh 6 Min Read
Supreme Court of India order about Kanwariya Yatra

கனமழை எதிரொலி.. தமிழகத்திற்கான தண்ணீர் திறந்துவிடப்படும்.! கர்நாடக அமைச்சர் பதில்.!

கர்நாடகா: காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கடந்த வாரம் வரையில் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவித்து வந்தது. காவிரி ஒழுங்காற்று வாரியம் தினம் ஒரு டிஎம்சி வீதம் இம்மாதம் முழுக்க வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து ஒருநாளைக்கு வெறும் 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படும் என அம்மாநில அரசு கூறியிருந்தது. இப்படியான சூழலில் தான் கடந்த வாரம் முதல் காவிரி நீர்ப்பிடிப்பு […]

#Karnataka 4 Min Read
Minister DK Shivakumar - Cauvery Issue

ரீல்ஸ் மோகம்! தூக்கில் தொங்கியபடி நடித்த சிறுவன்.. ! இறுதியில் நேர்ந்த சோகம்..?

மத்திய பிரதேசம் : இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாகவேண்டும் என்பதற்காக ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தை உணராமல் அவர்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடுகிறது. அப்படி தான் மத்திய பிரதேசம் முரைனா மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் ரீல்ஸ் செய்யும்போது உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முரைனா மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று ரீல்ஸ் […]

#Madhya Pradesh 4 Min Read
reels deaths

பணமிருந்தால் இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் – ராகுல் காந்தி

டெல்லி : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு விவாதத்தில் காட்டமாக பேசி இருந்தார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது. மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் […]

#Parliment 4 Min Read
Rahul Gandhi in Parliment

இந்திய நிதித்துறைக்கு பிரகாசமான எதிர்காலம்… பொருளாதார ஆய்வறிக்கை தகவல்.!

டெல்லி: 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனையொட்டி இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இன்று பிற்பகல், மாநிலங்கல்வையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் […]

#BJP 4 Min Read
Union Finance Minister Nirmala Sitharaman

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – மத்திய அரசு.!

டெல்லி : கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் RSS-ல் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு விலக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மத்திய ஊழியர்கள் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது […]

#PMModi 5 Min Read
rsss - centrel govt

மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் – பிரதமர் மோடி.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]

#BJP 4 Min Read
PMModi - Budget 2024

இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர்… முக்கிய நிகழ்வுகள் என்ன.?

டெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இம்முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA கூட்டணி தலைமையிலான ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி […]

#BJP 5 Min Read
New Parliament Building

அரசியலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு.! புள்ளி விவரத்தோடு மம்தா பெருமிதம்.!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தியாகிகள் பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய மம்தா பேனர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகளில் 38 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அதனை யாராலும் […]

#Mamata Banerjee 3 Min Read
West Bengal CM Mamata Banerjee (2)

மத்திய பட்ஜெட் 2024 : டெல்லியில் தொடங்கிய அனைத்துக்கட்சி கூட்டம்.!

டெல்லி: நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA தலைமையிலான ஆட்சி நடபெற்று வருகிறது. இதனால், […]

#BJP 4 Min Read
All Party Meeting held in Delhi

இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.1,000.. ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்.!

ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் மனைவி வாக்குறுதி அளித்துள்ளார். ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]

#AAP 3 Min Read
Aam Aadmi Party

வங்கதேச கலவரத்தில் பலி 115ஆக உயர்வு.! 778 மாணவர்கள் நாடு திரும்பினர்.!

பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]

#Bangladesh 4 Min Read
Bangladesh riots

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.! நீட் தேர்வு முடிவுகளை விரிவாக வெளியிட்ட NTA.!

நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் […]

#Supreme Court 5 Min Read
NEET Exam Results

வேகமெடுக்கும் சண்டிபுரா வைரஸ்..15 பேர் உயிரிழப்பு! அறிகுறிகள் என்ன?

குஜராத் : சண்டிபுரா (CHPV) என்கிற வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் 15 பேர் உயிரிழப்பு, 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சண்டிபுரா வைரஸ் குறித்த செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள வைரஸ் தொற்றுகளுக்கான ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, இது ஒரு தொற்று நோய் கிடையாது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது. […]

#Gujarat 5 Min Read
Chandipura vesiculovirus

அதிகாலை 3 மணி முதல்.. விமான போக்குக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு.!

டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான […]

air service 4 Min Read
Ministry Of Civil Aviation