டெல்லி : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு விவாதத்தில் காட்டமாக பேசி இருந்தார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது. மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் […]
டெல்லி: 2024-2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். அதனையொட்டி இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் பொருளாதார நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இன்று பிற்பகல், மாநிலங்கல்வையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் […]
டெல்லி : கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் RSS-ல் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு விலக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மத்திய ஊழியர்கள் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது […]
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் […]
டெல்லி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள பாஜக, இம்முறை தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA கூட்டணி தலைமையிலான ஆட்சியை பாஜக அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த பிறகு கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதன் பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி […]
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தியாகிகள் பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் பேசிய மம்தா பேனர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகளில் 38 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அதனை யாராலும் […]
டெல்லி: நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) முதல் தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து NDA தலைமையிலான ஆட்சி நடபெற்று வருகிறது. இதனால், […]
ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் மனைவி வாக்குறுதி அளித்துள்ளார். ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]
பங்களாதேஷ் : வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்ததால், இந்தியா, நேபாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லை வழியாக இந்திய பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கதேச விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது, நேற்று மட்டும் 52 […]
நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் […]
குஜராத் : சண்டிபுரா (CHPV) என்கிற வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் 15 பேர் உயிரிழப்பு, 29 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சண்டிபுரா வைரஸ் குறித்த செய்தி வெளியானதையடுத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள வைரஸ் தொற்றுகளுக்கான ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள அம்மாநில சுகாதாரத்துறை, இது ஒரு தொற்று நோய் கிடையாது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது. […]
டெல்லி: மைக்ரோசாப்ட் இயங்குதள பிரச்சனை சரிசெய்யப்பட்டு இன்று அதிகாலை முதல் இந்திய விமான சேவை வழக்கம் போல இயங்குகிறது என மத்திய விமான போக்குவரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்ட கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) பிரச்சனை காரணமாக உலகம் முழுக்க கணினியை மையமாக கொண்டு இயங்கும் பல்வேறு துறைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக உலகளவில் பல்வேறு இடங்களில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் போர்டிங் பாஸ், செக் இன் ஆகியவை விமான […]
யுபிஎஸ்சி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவரான மனோஜ் சோனி, தனிப்பட்ட காரணங்களுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே பதவி விலகியுள்ளார். 2017இல் UPSC உறுப்பினரான சோனி, 2023 மே 16இல் தலைவரானார். பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 5 ஆண்டுகள் மீதமுள்ள நிலையில் குடியரசுத் தலைவரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அது ஏற்கப்பட்டதா, இல்லையா என தெளிவாகவில்லை. ஆன்மிக தொண்டு புரிய பதவி விலகியதாக கூறப்படுகிறது சோனியின் ராஜினாமா […]
டெல்லி: உலகளாவிய மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் தேசிய தகவல் மையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் இயங்கு தளமானது சில மணி நேரங்களுக்கு முன்னர் பாதிப்பை சந்தித்தது. இதனால் ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின. மைக்ரோசாப்ட் பாதிப்பு காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் […]
மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் கணினி முகப்பு திரையில், “உங்கள் கணினி சிக்கலில் உள்ளது. நாங்கள் அதற்கான புகார்களை சேகரித்து வருகிறோம். நீங்கள் உங்கள் கணினியை ரீ-ஸ்டார்ட் செய்துகொள்ளுங்கள் ” என நீல நிற திரை காண்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுக்க பல்வேறு கணினி பயனாளர்கள், பிரதான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. […]
திரிபுரா : மேற்கு மாவட்டத்தில் வங்கதேச எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கிராமவாசி ஒருவராது மீன்குளத்தை தோண்டியபோது, 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 27 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மோட்டார் குண்டுகள் கிடைத்தது குறித்து இந்த தகவலை அறிந்து வந்த, பமுதியா புறக்காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு மற்றும் TSR பணியாளர்கள் அகழாய்வைத் பணியை தொடங்கினர். மொத்தம் 27 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டன, இந்த கண்டுபிடிப்பு அடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பை […]
டெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ள தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புது வை மாநில அதி காரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது. காவிரியில் இருந்து […]
டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது. அதனை […]
ஆந்திரப் பிரதேசம் : விஷாகப்பட்டினத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது, மனைவி அவரை கையும் களவுமாக பிடித்தார். காதலியின் மோகம் கொண்ட கணவன் மனைவியை கவனிக்கவில்லை. அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். கிடைத்த தகவலின், படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவைச் சேர்ந்த நபர் விவேக் . இவர் சோடவரத்தைச் சேர்ந்த ஹரிதா என்பவரை கடந்த 2020 டிசம்பர் 17-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஹரிதா விவேக்கின் பெரியவர்களை சமாதானப்படுத்தி […]
டெல்லி: பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி, கோவை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருவதாக கூறி சென்னை காவல் ஆணையர் உத்தரவின்படி சவுக்கு சங்கர் மீது கடந்த மே 12இல் குண்டர் சட்டம் பதியப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் தயார் கமலா முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]