கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன், திமுக அரசை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், […]
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ரெட் அலெர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும், தேனி, தென்காசி, குமரியில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல்லில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் […]
கோயம்புத்தூர் : நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சியில் 11.6 டிஎம்சி நீர் நிறைந்துள்ளது, அணையில் இருந்து 105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் […]
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழிப் பேத்தியான டாக்டர் திவ்யபிரியா (வயது 28) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மே 22, 2025 அன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறு பத்தடி பாலம் அருகே நடந்தது. சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனது காரில் சென்று […]
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று குற்றம்சாட்டி வைஷ்ணவி கட்சியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, இன்றைய தினம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அவர் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடைம் பேசிய அவர், ”தவெகவில் ஒரு வருடமாக பயணித்தேன், நான் கடந்த மே 3 ஆம் தேதி தவெகவில் இருந்து […]
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும் நீண்ட நேரம் எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்ததாக உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், குட்டியுடன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பெண் யானைக்கு 2 கும்கிகள் உதவியுடன் 5 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக, அந்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட […]
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இந்த மாநாடு கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் இன்றும் கருத்தரங்கில் பங்கேற்று, கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அவரது உரையில், ”மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுகொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து […]
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தவெக முகவர்கள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கு மேடையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியதை தொடர்ந்து, தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ”ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய […]
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். அதனை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே தவெக கருத்தரங்கிற்கு வருகை தந்தார் தலைவர் விஜய். மேலும், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தவெக முகவர்கள் இன்றைய […]
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய தினம் கோவையில் ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளனர். அட ஆமாங்க ஒரு பக்கம், தவெக தலைவர் விஜய் கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, […]
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 26 மற்றும் 27, 2025 அன்று இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த 16,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். தவெக தலைவர் விஜய் இரு நாட்களும் மதியம் 3 மணிக்கு கருத்தரங்கில் பங்கேற்று நிர்வாகிகளிடையே உரையாற்றுகிறார். இந்த நிலையில், […]
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து பூத் கமிட்டி கருத்தரங்கில் த.வெ.க தலைவர் விஜய் உரையாற்ற உள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”கோவை குரும்பாளையம் SNS கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் […]
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய நிலையில், முழு ஆண்டு தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால், மாதவிடாய் காரணத்தை காட்டி, அவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வகுப்பறையை பூட்டிவிட்டு, வெளியே குறிப்பாக படிக்கட்டில் அமர வைத்து தேர்வு எழுதுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாணவியின் தாயால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது […]
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன. மேலும், துறவி வேடத்தில் வந்து வெள்ளி வேலை மர்மநபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது. தற்போது, மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை. அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். […]
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 25 ஆம் தேதி கோவை வருகிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும், அங்கிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்ட பாஜக அலுவலகங்களையும் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 25 ஆம் தேதி அன்றிரவு கோவை ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவிலும் அவர் பங்கேற்கிறார். கோவை மாவட்டம் ஈஷா மையத்தில் பிப்ரவரி 26 […]
கோவை : 1998-ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மகளிரணி தேசியத்தலைவிவானதி சீனிவாசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய அண்ணாமலை, 2026இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் […]
கோவை : கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை ஆணவ படுகொலை வழக்கில் இன்று குற்றவாளி வினோத் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. வினோத் குமாரின் தம்பி கனகராஜ் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஆகியோரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக வினோத் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், […]
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கயிறு இழுக்கும் போட்டியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அவர் வடம் இழுத்தார். இரு தரப்பும் போட்டிப்போட்டு கயிறை இழுத்த நிலையில், அண்ணாமலை பக்கம் இருந்த கயிறு சட்டென அறுந்தது. இதில் அண்ணாமலையுடன் இருந்த பாஜகவினர் கீழே விழுந்தனர். அண்ணாமலை தடுமாறி கீழே விழ போன போது, […]
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது 3-வைத்து மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில், மலையில் இருந்து இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த துயரைச் சம்பவம் […]
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதிமுக பிளவுபட்டபோது ஓபிஎஸ் அணியில் இருந்த அவர், கருத்துவேறுபாடு காரணமாக திமுகவில் இணைந்தார். அவருக்கு சமீபத்தில் தான், […]