வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டு உள்ளது. எல்லை வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவும் வகையில் மக்கள் வசிப்பிடங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இன்று வரை, பாகிஸ்தான் இராணுவம் 3,800-க்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், மேலும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்ததாகவும் கூறினார்.
எல்லையில் இருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்த பாகிஸ்தான் முயன்றது என்று அவர் கூறினார். பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மசூத் அசார், தாவூத் இப்ராஹிம், ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி போன்ற பல பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்ரீவஸ்தவா கூறினார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…