[Image source : PTI]
வன்முறையை தடுக்க துணை ராணுவ படையினர் மணிப்பூர் மாநிலதிற்கு விரைந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு பிரிவினரை பழங்குடி இன பட்டியலில் சேர்க்கும் வண்ணம் மாநில உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து இரு பிரிவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. பலர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரு பிரிவினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், அங்கு மீண்டும் சில இடங்களில் வன்முறை உண்டானது. இதனால், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நியூ செக்கன் பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையில் இரு பிரிவினர் இடையே வன்முறை உண்டானது. இதில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
இதனால், அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், மீண்டும் வன்முறை நிகழாமல் தடுக்க மணிப்பூருக்கு துணை ராணுவ படையினர் விரைந்துள்ளனர்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…