கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இந்த வருடம் ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணியை தொடங்கினர்.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மே 11 ஆம் தேதி குழந்தைகளுக்கு கோவாக்ஸின் தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி அளித்தது. அதைப்பற்றி குறிப்பிட்ட நீதி ஆயோக் மருத்துவக்குழு உறுப்பினர், 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த கோவாக்ஸின் மருந்தை 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியதாக கூறினார்.
அதனை தொடர்ந்து பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் தடுப்பூசியை வைத்து இந்த பரிசோதனை செய்கின்றனர்.
தற்போது 18 முதல் 45 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான பரிசோதனையை தொடங்கியுள்ளது பாட்னா. மேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…