கடந்த ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விவகாரம் இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.குறிப்பாக, பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த கூறப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது.
மத்திய அரசு மறுப்பு:
ஆனால்,இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
ரூ.25 கோடி பேரம்:
இந்நிலையில்,5 ஆண்டுகளுக்கு முன்பே,பெகாசஸ் மென்பொருளை தங்கள் மாநிலத்தில் விற்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால்,அதனை வாங்க விரும்பவில்லை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திட்டவட்டமாக மறுத்து விட்டேன்:
மேலும்,இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:”5 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் உளவு மென்பொருளை விற்க எங்கள் காவல்துறையினரை அணுகினர்.இதற்காக,ரூ 25 கோடி பேரம் பேசினர்.இந்த செய்தி என்னிடம் வரவே,இதுபோன்ற மென்பொருள்களை வாங்க விருப்பமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டேன்” என அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு:
மேலும்,ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது பெகாசஸ் மென்பொருளை அவர் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.ஆனால்,பெகாசஸ் மென்பொருளை தங்களிடம் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் முன்வந்தது உண்மை என்றும்,ஆனால்,அதை நிராகரித்துவிட்டதாகவும் தெலுங்கு தேச கட்சியின் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…