ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் ஜியோ மார்ட்டின் வணிக தளத்தின் பெயரில் போலி வெப்சைட் இயங்கி வருவதாகவும், எனவே மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருக்க ரிலையன்ஸ் வலியுறுத்தி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் முறையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு விஷயமும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விற்கும் பிரபல வணிக தளம் என்பது ஜியோ மார்ட்டாகும். தற்போது இதன் பேரில் போலி இணையதளங்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை ஜாக்கிரதையாக இருக்க வலியுறுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில், ஜியோ மார்ட் வணிக தளத்தின் பெயரில் போலி இணையதளங்கள் பல இயங்கி வருவதாகவும், எனவே வாடிக்கையாளர்கள் யாரும் ஏமாற கூடாது என்றும், ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஜியோ மார்ட்டின் தரப்பில் இருந்து விநியோகஸ்தர்களுக்கோ, உரிமையாளர்களுக்கோ எந்த மாதிரி உரிமமும் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு உரிமங்கள் வழங்குவதாக கூறி எந்த வாடிக்கையாளர்களிடமிருந்தும் தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும், எனவே மக்கள் ஏமாறாமல் ஜாக்கிரதையாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…