Categories: இந்தியா

மக்களை பாதிக்காத வகையில் AI க்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும்… தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சந்திரசேகர்.!

Published by
Muthu Kumar

மக்களை பாதிக்காத வகையில் AIக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் அளிக்காத வகையில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) இந்திய அரசு ஒழுங்குபடுத்தும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முன்னேற்றம் குறித்த விளக்கக்காட்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்று கூறினார்.

தற்போது இணையத்தில் அதிகரித்து வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும் கவலை தெரிவித்த சந்திரசேகர், ஆன்லைனில் பயனர்களை ஏமாற்றும் முயற்சியை அரசு முறியடித்து வருவதாகவும் கூறினார். தற்போது 85 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், இது 2025க்குள் இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் தனது இந்திய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாற்றினார். இந்தியாவின் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் நாட்டின் AI திறன் குறித்தும் உரையாடியதாக சாம் ஆல்ட்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதற்கு பிரதமரும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வரவேற்பதாகவும் பதில் ட்வீட் செய்திருந்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

“கோயில் நிலத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு நிலத்தை சொந்தமாக்கப்படும்” – எடப்பாடி பழனிசாமி.!

தஞ்சாவூர் : புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணம் என்கின்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,…

19 minutes ago

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

10 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

11 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

12 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

12 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

13 hours ago