Categories: இந்தியா

மக்களை பாதிக்காத வகையில் AI க்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும்… தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சந்திரசேகர்.!

Published by
Muthu Kumar

மக்களை பாதிக்காத வகையில் AIக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் வேளையில், மக்களுக்கு எந்த வித பாதிப்பும் அளிக்காத வகையில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை (AI) இந்திய அரசு ஒழுங்குபடுத்தும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் முன்னேற்றம் குறித்த விளக்கக்காட்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செயற்கை நுண்ணறிவால் (AI) ஏற்படக்கூடிய தீங்குகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை அரசாங்கம் செயல்படுத்தும் என்று கூறினார்.

தற்போது இணையத்தில் அதிகரித்து வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும் கவலை தெரிவித்த சந்திரசேகர், ஆன்லைனில் பயனர்களை ஏமாற்றும் முயற்சியை அரசு முறியடித்து வருவதாகவும் கூறினார். தற்போது 85 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், இது 2025க்குள் இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் தனது இந்திய பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாற்றினார். இந்தியாவின் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் நாட்டின் AI திறன் குறித்தும் உரையாடியதாக சாம் ஆல்ட்மேன் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இதற்கு பிரதமரும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வரவேற்பதாகவும் பதில் ட்வீட் செய்திருந்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

10 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

11 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

11 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

12 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

12 hours ago