தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஓட்டுநர் முகமது ,சென்ன கேசவலு மற்றும்கிளீனர் சிவா , நவீன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருந்தனர்.பின்னர் போலீசார் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 03-ம் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் செல்போன் மற்றும் சில பொருள்களை பிரியங்காவை கொன்ற இடத்திலே வைத்து இருப்பதாக விசாரணையில் கூறினார். பின்னர் நால்வரையும் பெண் மருத்துவர் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரை நான்கு பேரும் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும் , தற்காப்புக்காக போலீசார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.
இந்நிலையில் நான்கு பேர் என்கவுண்டர் செய்தது தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் நீதிமன்றத்தின் வழிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என கூறி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…