பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது.
இன்று அனைத்து வீடுகளிலுமே விறகு அடுப்பு பயன்படுத்துவதை தவிர்த்து, கேஸ் அடுப்பை தான் பயன்படுத்துகின்றனர். பொதுவாக அதிகபட்சமான மக்கள் சிலிண்டர் உபயோகிப்பதால் சிலிண்டர் விலை அதிகரிப்பு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது.
இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பிற்கு பின், டெல்லியில் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ .719 , கொல்கத்தாவில் ரூ .745.50, மும்பையில் ரூ .719, சென்னையில் ரூ .735 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர்கள் விலை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், பெட்ரோல் விலையும், பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.86.65 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 35 பைசா உயர்ந்து ரூ .76.83 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…