சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் வழங்க திட்டம்.?

Published by
murugan

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் வரவேற்றது. மேலும் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்பதை இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ-க்கு கடந்த 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, மதிப்பெண் வழங்கும் நடைமுறையை குறித்து பரிந்துரை செய்த 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நியமித்தது. அக்குழு பரிந்துரையின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண், 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளிகளில் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு வெயிட்டேஜ் முறையில் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
murugan

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

1 hour ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

2 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

3 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

3 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

4 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

4 hours ago