இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி பயன்பாடு குறித்தும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசாவுக்கு அடுத்தபடியாக, டெல்லியிலும் தடுப்பூசிகள் முடிந்துவிட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களுக்கு வழக்கமான, போதுமான மற்றும் தடையின்றி தடுப்பூசி வழங்குவதை அவர் எவ்வாறு உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்பதை தயவு செய்து எங்களிடம் கூறுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…