ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்றுள்ளது. பாஜக 8 இடங்களையும், ஜனசேனா 21 இடங்களையும், ஆளும் YSR காங்கிரஸ் 11 இடங்களை யும் வென்று இருந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கு தேசம் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரேம் குமார் ஜெயின் ANI பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “சந்திரபாபு நாயுடு நேற்றே அவரது முழு ஆதரவையும் என்.டி.ஏ-வுக்கு தெரிவித்திருந்தார். இந்திய கூட்டணி எதை வேண்டுமென்றாலும் கூறலாம். ஆனால், நாங்கள் என்.டி.ஏ-வுடன் தான் இருக்கிறோம்.
மேலும், வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் சந்திரபாபு பதிவியேற்பு விழாவிற்கு பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார் மேலும் மற்ற தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளோம்”, என கூறினார்.
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…