இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.இந்த விமானம் நீரில் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் 145-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலைக்கு மரியாதை செலுத்தினார்.இதன் பின், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கெவாடியாவில் உள்ள பட்டேல் சிலை இடையே கடல் விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்து சேவையை தொடங்கி வைத்தார்.இன்று முதல் தினந்தோறும் நீர்வழி விமானங்கள் இயக்கப்பட உள்ளது.உதான் திட்டத்தின் கீழ் இதற்கான கட்டணம் ரூ.1,500 இருந்து தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயணச் சீட்டுகளை http://www.spiceshuttle.com என்ற இணையதள முகவரியில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…