கங்கை கரை படியில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகளை விரைந்து இடிக்க உ.பி அரசு முடிவு..

Published by
Kaliraj
  • வற்றாத ஜீவ நதியான கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய அமைப்பை மத்திய அரசு அமைத்தது.
  • இதில் கலந்து கொண்டு திரும்பும் போது பிரதமர் மோடி தவறி விழுந்த படிகளை விரைவாக இடிக்க உத்திரபிரதேச அரசு முடிவு.

அந்த  அமைப்பின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் மாநிலம்  கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த   கூட்டத்தை  முடித்துவிட்டு பிரதமர் மோடி கங்கை நதியில் படகுப் பயணம் செய்துவிட்டு  திரும்பிய போது கங்கை கரையின்  படியில்  ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தாங்கி பிடித்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த  படிகட்டுகளை இடித்துவிட்டு அந்த படிகளை  சீரமைக்க உத்திர பிரதேச அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த மண்டல கமிஷ்னர் பாப்டே.,  “பிரதமர் தடுக்கி விழுந்த படி மற்ற படிகளைக் காட்டிலும்  உயரம் சற்று குறைவாக  வேறுபட்டு இருக்கும். இதேபோல்  இதற்கு முன்னர்  பலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் புதிய படிகளை  கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.

Published by
Kaliraj

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

21 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

58 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago