அந்த அமைப்பின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி கங்கை நதியில் படகுப் பயணம் செய்துவிட்டு திரும்பிய போது கங்கை கரையின் படியில் ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தாங்கி பிடித்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகட்டுகளை இடித்துவிட்டு அந்த படிகளை சீரமைக்க உத்திர பிரதேச அரசு தற்போது முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த மண்டல கமிஷ்னர் பாப்டே., “பிரதமர் தடுக்கி விழுந்த படி மற்ற படிகளைக் காட்டிலும் உயரம் சற்று குறைவாக வேறுபட்டு இருக்கும். இதேபோல் இதற்கு முன்னர் பலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் புதிய படிகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…