பிரதமர் மோடி வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில், ரூ.614 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை, காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில், உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மேலும், பிரதமர் மோடி தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்புக்கும் அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், ராம்நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனை மேம்படுத்தல், கழிவுநீர் தொடர்பான பணிகள், பசுக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பலநோக்கு விதை களஞ்சிய சாலை, 100 மெட்ரிக் டன் விவசாய உற்பத்தி கிடங்கு, வீட்டு வளாகம் மற்றும் சாம்பர்ணானந்த் ஸ்டேடியத்தில் உள்ள வீரர்களுக்காக, வாரணாசி நகர ஸ்மார்ட் லைட்டிங் பணிகள் மற்றும் 105 அங்கன்வாடி கேந்திரங்கள் போன்ற பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.
மேலும், தசாஸ்வமேத் காட் மற்றும் கிட்க்கியா காட் ஆகியவற்றின் மறுவடிவமைப்பு, பிஏசி போலீஸ் படையினருக்கான தடுப்பணைகள், காசியின் சில வார்டுகளில் மறுவடிவமைப்பு, பார்க்கிங் வசதி மற்றும் பெனியா பாக் நகரில் உள்ள ஒரு பூங்காவின் மறுவடிவமைப்பு, பி.எம்.கிரிஜா தேவி சம்ஸ்கிருத சங்கூலில் பல்நோக்கு மண்டபம், நகரத்தில் சாலைகள் பழுதுபாப்பு மற்றும் சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல் போன்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…