உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன – பிரதமர் மோடி.
நாம் எனப்படும் அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது தனது பல்வேறு கருத்துக்களை அதில் முன்வைத்தார்.
அவர் பேசுகையில், ‘ உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் போது சில நாடுகள் மட்டும் பயங்கரவாதம் எனும் கொடுமையான வைரஸை பரப்பி வருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில் சுய ஒழுக்கத்துடன் அதனை மக்கள் இயக்கமாகவும் இந்தியா மாற்றியுள்ளது.
இந்தியா இதுவரை 121 நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் புதிய பரிணாமத்தை நோக்கி செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தின் மீது மட்டும் அக்கறை கொள்ளாமல் தனி மனித நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். ‘ என தனது கருத்துக்களை பிரதமர் மோடி அமைப்பு சாரா நாடுகளுடனான காணொளியில் முன்வைத்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…