PM Modi Election Campaign [Image source : ANI]
சென்னை: பாஜக என்றுமே சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று, இன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக 8 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால், தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய அரசியலமைப்பு என்பது மதச்சார்பற்ற அமைப்பு. அதனை தவிர்த்து மதத்தின் அடிப்படையில் பிரிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்றும் கூறினார். ஆனால் இந்த உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறி வருவதாகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை பயன்படுத்தி வருவதாகவும் , இதனை அம்பலப்படுத்துவதே தனது முயற்சி என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டார்.
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, இன்று மட்டுமல்ல, என்றுமே சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்படாது. சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை. நான் காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக பேசி வருகிறேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் குறித்து பேசுகிறேன். அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று அப்போதே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இப்போது காங்கிரஸ் அதில் இருந்து விலகி செல்கிறது என்றும் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார் பிரதமர் மோடி.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…