மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் இறந்ததற்கு பிரதமர் மோடி ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையின் சிறப்பு பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த செய்தி வெளியானதும், துயரமடைந்த குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாம் விலை மதிப்பற்ற பிஞ்சு உயிர்களை இழந்துவிட்டோம்.பச்சிளங்குழந்தைகளின் இறப்பு வேதனை அளிக்கிறது.காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வேண்டுகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது கடுமையான துன்பத்தை அளிக்கிறது. உயிரிழந்த குழந்தைகளில் குடும்பத்திற்க்கு தேவையான உதவிகளை மகாராஷ்டிரா அரசு செய்ய வேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…