நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
260 நகரங்களில் 800 மையங்களில் CBT முறையில் நடத்தப்படும் தேர்வை 1.74 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்கான முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் நாளை இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…