15 மணிநேர மின் தடைக்கு பின், நவி மும்பை மற்றும் தானே பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஜூகு, அந்தேரி, நவி மும்பை, பான்வெல், தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு கல்வா பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மின்வாரிய நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர். மேலும், மின் தடை காரணமாக பாதி வழியிலே பல ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகளும் அவதிக்குள்ளாயினர். அதனைதொடர்ந்து போக்குவரத்துக்கு சிக்னல்களும், அடுக்குமாடி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள லிப்டுகளும் இயங்காத காரணத்தினால் மும்பை மக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
மும்பையில் ஏற்பட்ட மின்தடை குறித்து மத்திய எரிசக்தி மற்றும் இணையமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்ததாவது, மின்சார விநியோகம் விரைவில் சரிசெய்யப்படும் எனவும், தேசிய மின் விநியோக அமைப்பு நன்றாக உள்ளதாகவும், மாநில அமைப்பின் தான் சில கோளாறு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில், மின் தடை ஏற்பட்ட 15 மணி நேரத்திற்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் நவி மும்பை மற்றும் தானே ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் மற்ற பகுதிகளுக்கு இன்னும் மின் வசதி கிடைக்கவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…