Categories: இந்தியா

நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம்! பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!!

Published by
பால முருகன்

பிரதமர் மோடி : பிரதமர் நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம் என  பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார். பிகாரின் நவாதா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி கால்களில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளானது.

இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது பற்றி பேசியுள்ளார். பாகல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த அவர் ” நிதிஷ் குமார்  பிரதமர் மோடியின் கால்களை தொட்டு பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். இப்படியான சூழலில், நிதிஷ் குமார், தன்னுடைய செல்வாக்கை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கிறன்.

அவர் பிகார் மாநிலத்துடைய நன்மைக்காக, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. வருகின்ற 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மோடியின் பாஜக கட்சி ஆதரவோடு  வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக தான் செல்வாக்கை பயன்படுத்துகிறார். அதன் காரணமாக தான் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்தார். இது பிகாருக்கு அவமானம் தான்” எனவும்  பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

4 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

5 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

5 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

5 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

6 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

6 hours ago