Categories: இந்தியா

நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம்! பிரசாந்த் கிஷோர் ஆவேசம்!!

Published by
பால முருகன்

பிரதமர் மோடி : பிரதமர் நிதிஷ்குமார் பிரதமர் மோடி காலில் விழுந்தது பிகாருக்கு அவமானம் என  பிரசாந்த் கிஷோர் ஆவேசமாக பேசியுள்ளார். பிகாரின் நவாதா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி கால்களில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் விழுந்து வணங்கினார். இந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளானது.

இந்த சம்பவம் நடந்து 3 மாதங்கள் கடந்த நிலையில், இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இது பற்றி பேசியுள்ளார். பாகல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களை சந்தித்த அவர் ” நிதிஷ் குமார்  பிரதமர் மோடியின் கால்களை தொட்டு பிகாருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு நிதிஷ் குமார் முக்கியப் பங்கு வகிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். இப்படியான சூழலில், நிதிஷ் குமார், தன்னுடைய செல்வாக்கை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கிறன்.

அவர் பிகார் மாநிலத்துடைய நன்மைக்காக, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தவில்லை. வருகின்ற 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மோடியின் பாஜக கட்சி ஆதரவோடு  வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக தான் செல்வாக்கை பயன்படுத்துகிறார். அதன் காரணமாக தான் நிதிஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களில் விழுந்தார். இது பிகாருக்கு அவமானம் தான்” எனவும்  பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 minutes ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

44 minutes ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

1 hour ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

2 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

2 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

3 hours ago