உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்படுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனியில் இருந்து கைது செய்யப்பட்ட பின்னர் துபே ஒரு “போலி” என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவரது காவலைப் பெற்றவுடன் மற்ற சக குற்றவாளிகளைப் போலவே கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஜூலை 2 -ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு விகாஸ் துபே நான்கு கூட்டாளிகள் கொல்லப்பட்டபோது செய்ததைப் போலவே உத்தரப்பிரதேச காவல்துறையும் துபேக்கு அதே கதையை உருவாக்கும்” என்று உபாத்யாய் கூறினார்.
தனக்கு துபே மீது எந்த அனுதாபமும் இல்லை என்று கூறினார்.துபே மீது 60 கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தங்கள் கடமையை நேர்மையாக நிறைவேற்றாததாலும், ஊழலில் ஈடுபட்டதாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்று வழக்கறிஞர் கூறினார்.
கான்பூர் என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…