கேரளாவில் கர்ப்பிணி ஆட்டிற்கு அரங்கேறிய கொடூரம் .., ஒருவர் கைது..!

Published by
murugan

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட் (kanhangad) நகரில் கர்ப்பிணி ஆட்டை அடையாளம் தெரியாத மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். கோட்டச்சேரியில் உள்ள ஓட்டலுக்கு சொத்தமான ஆடுகள் கொல்லைப்புறத்தில் கட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கொல்லைப்புறத்தில் இருந்த இரண்டு ஆடுகள் ஒரே மாதிரி கத்தியுள்ளது என ஹோட்டல் ஊழியர்கள் கூறினர். (அதில் ஒன்று கர்ப்பமாக இருந்தது).

கர்ப்பிணி ஆடு ஓன்று இன்னும் ஒரு மாதத்தில் குட்டி ஈன்று எடுக்க இருந்தது. இதனால், கொல்லைப்புறத்தில் ஹோட்டல் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, மூன்று பேர் ஆடு மீது பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தனர். இதனால் அவர்களை பிடிக்க முயன்றபோது செந்தில் என்பவர் சிக்கினார். மேலும் இருவர் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். இச்சம்பவத்தில் கர்ப்பிணி ஆடு இறந்து கிடந்தது.

 சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செந்திலை கைது செய்து ஆட்டை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன் வேலை தேடி இங்கு வந்தார் என தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் விலங்குகள் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டும் இதே போன்ற நிகழ்வு:

ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் கர்ப்பிணியாக இருந்த ஆட்டை 8 பேர் கொண்ட  கும்பல் இரவில் ஆட்டை பலாத்காரம் செய்தனர். அவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

11 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

12 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

13 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

13 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

14 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

15 hours ago