நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் செல்போன் சேவை

Published by
Venu
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் சேவைகள்,இணையசேவைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது.
  • தடை செய்யப்பட்ட  சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று  காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இது மட்டும் அல்லாது காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என்று இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் அரசின்  முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இந்த சட்டமும் அமலுக்கு வந்தது.காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

ஆனால் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வருவதற்கு முன்னரே மத்திய அரசு ஜம்மு காஷ்மீரில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டது.அதாவது அங்கு செல்போன் சேவைகள்,இணைய சேவைகள் ரத்து  செய்யப்பட்டது .144 தடை உத்தரவு மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.இதற்கு இடையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும்,இணையம் ,செல்போன் உள்ளிட்ட சேவைகளை நிறுத்தியதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.அந்தவகையில் தொலைபேசி,இணைய சேவைகளை திரும்ப வழங்ககோரிய வழக்கில் உச்சநீதிமன்றமும் 7 நாட்களில் இணைய சேவை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் முதன்மை செயலர் ரோகித் கன்சால் கூறுகையில்,காஷ்மீருக்கான சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டபோது தடை செய்யப்பட்ட  சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அதாவது ஜம்மு காஷ்மீரில் ப்ரீ -பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு செல்பேசி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை இன்று முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு காஷ்மீர் பகுதியில் இந்த சேவைகள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

7 minutes ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

23 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

11 hours ago