முக்கியச் செய்திகள்

3 நாள் பயணமாக சுரினாமுக்கு வந்தடைந்தார் திரௌபதி முர்மு.!

Published by
கெளதம்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக சுரினாமுக்கு வந்தடைந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பிறகு, தென் அமெரிக்க நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு நட்புறவை மேம்படுத்துவதற்காக அவர் முதல் முறையாக சுரினாம் வந்துள்ளார். சுரினாமின் ஜனாதிபதி, முழு அரசு மரியாதையுடன் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் வரவேற்றார்.

ஜனாதிபதி முர்மு தனது சுரினாம் பிரதிநிதி சந்திரிகாபெர்சாத் சந்தோகியுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த இருக்கிறார். தென் அமெரிக்க நாட்டிற்கு இந்தியர்கள் வருகையின் 150 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.

ஜனாதிபதி ஜூன் 6 வரை சுரினாமில் இருப்பாராம். அங்கு வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று இந்திய சமூகத்தின் உறுப்பினர்களுடன் உரையாடவுள்ளார். பின்னர், செர்பியாவின் ஜனாதிபதியான அலெக்ஸாண்டர் வுசிக்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூன் 7 ஆம் தேதி செர்பியாவிற்கு செல்கிறார்.

செர்பியாவில், ஜனாதிபதி முர்மு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார், மேலும் பிரதமர் அனா பிரனாபிக் மற்றும் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் ஓர்லிக் ஆகியோரை சந்திப்பார்.

Published by
கெளதம்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago