Categories: இந்தியா

பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி.? குடியரசு தலைவர் உரையில் சலசலப்பு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கி , புதிய எம்பிக்கள் பதவி ஏற்பு, பின்னர் சபாநாயகர் தேர்தல் என நிறைவு பெற்று இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கியது

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பேசுகையில், 3வது முறையாக பிரதமரான நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சி பற்றி பல்வேறு பாராட்டுக்களை தெரிவித்தார்

அப்போது குறிப்பிடுகையில், மக்கள் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் தான் 6 தசாப்தங்களுக்கு பிறகு ஒரு கட்சி (பாஜக) பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சியை அமைத்துள்ளது என குறிப்பிட்டார். மேலும், இந்த நிலையான அரசாங்கத்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்றும்,18-வது மக்களவை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மக்களவை என குறிப்பிட்டார்.

பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது என திரௌபதி முர்மு கூறுகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது சலசலப்பு நிலவியது.

ஏனென்றால் , 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் தான் பாஜக பெரும்பான்மையுடன் மற்ற கட்சிகளின் ஆதரவு இன்றி ஆட்சியை கைப்பற்றி இருந்தது. ஆனால் நடந்து முடிந்த 2024 தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பிடித்தது. இதனால் NDA கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தான் தற்போது பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

16 minutes ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

48 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

50 minutes ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

2 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

2 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago