இந்தியா

NDA என்பதற்கு புது விளக்கமளித்த பிரதமர் மோடி..!

Published by
லீனா

N – புதிய இந்தியா, D – நாட்டின் வளர்ச்சி நாடு A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம் என NDA-க்கு பிரதமர் மோடி விளக்கம்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில்,பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் 39 கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்திலிருந்து அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, NDA என்பதற்கு புது விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, N – புதிய இந்தியா, D – நாட்டின் வளர்ச்சி நாடு A – மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம். N – New India, D – developed Nation A – aspirations of people and region. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என பெயரிட்டு இருந்த நிலையில், பிரதமர் மோடி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், என் டி ஏ கூட்டணிக்கு தேசம் தான் முதலில் முக்கியம். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். வளர்ச்சியும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதும் தான் என் டி ஏ கூட்டணிக்கு முக்கியம். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் நேர்மறையான அரசியலையே முன்னெடுத்தோம்.

முந்தைய அரசுகளின் ஊழல்களை வெளி கண்டு வருகிறோமே தவிர மக்கள் தீர்ப்பை அவமதிக்கவில்லை. ஆளும் அரசுகளுக்கு எதிராக ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளின் உதவிகளை நாடியதில்லை. மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் என்டிஏ செயல்படுகிறது. யாரையும் எதிர்ப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படவில்லை.

அரசியல் கூட்டணிக்கு நாட்டில் மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணியும் வெற்றி பெறாது. ஸ்திரத்தன்மையுடன் நடைபெறும் ஆட்சியே இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை பிறக்க காரணம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago