மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கிக்காக இறந்த உடல்களை வைத்து கூச் பகுதியில் பேரணி நடத்துகிறார்,என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இதில்,நான்காம் கட்ட வாக்குப் பதிவானது ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற்ற போது,கூச் பெஹார் மாவட்டத்தின் சீதகுல்ச்சியில் ஒரு வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்தது.இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதைப் பற்றி கூறுகையில்,”மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். வரிசையில் நின்ற வாக்காளர்களை சுட்டுக் கொள்ளும் அளவிற்கு சிஆர்பிஎஃப் வீர்களுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது ” எனக் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து,மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கடந்த வாரம் கூச் பெஹார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 பேரின் உடல்களை வைத்து, தேர்தலில் தனக்கு சாதகமாக வாக்குகள் பெறுவதற்காக சதித்திட்டம் செய்கிறார்.கூச் பெஹாரில் என்ன நடந்தது என்பதை அறிய, சமீபத்தில் வெளியான ஆடியோ டேப்பைக் நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.ஏனென்றால்,இறந்தவர்களின் உடல்களை வைத்து பேரணி நடத்தி அரசியல் விளையாடுவது மம்தாவின் பழைய பழக்கமாகும்”,என்று குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…