உலக மக்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் மேலும்,
கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து, அறிவியல் ரீதியான சோதனைகளை நடத்த வேண்டும். கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு பாராட்டுக்கள். இந்தியாவுக்கு மட்டுமன்றி, உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள், மருந்துகள் வழங்கப்படும். கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர, அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…