பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!

Published by
Surya

குஜராத் சென்ற பிரதமர் மோடி, சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை “தேசிய ஒற்றுமை தினம்” என ஒவ்வொரு ஆண்டு, அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை இந்தியா முழுவதும் “ஏக்தா திவாஸ்” அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத் வந்தடைந்தார். குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர், அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அதனைதொடர்ந்து, நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் உள்ள மூலிகை பூங்காவை தொடங்கிவைத்த அவர்,குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவையும் தொடங்கி வைத்தார். மேலும், சர்தார் படேல் விலங்கியல் பூங்காவை திறந்து வைத்து, அங்கு ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடன் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீரிலும், வானிலும் செல்லும் “சீப்ளேன்” எனப்படும் கடல்வழி விமான சேவையை நாளை தொடங்கிவைக்கவுள்ளார். அதன்பின் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தவுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

1 hour ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

2 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

2 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

3 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

3 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

4 hours ago