கடந்த 5 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இரண்டாவது நாளான அவையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் கிசான் திட்டம் மோசடி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிஸான் திட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் கிசான் திட்டத்தில் சில போலியான பயனாளிகள் சோ்க்கப்பட்டதாக தெரியவந்தது. சில மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளார். முறைகேடாக பயனடைந்தவா்களிடம் இருந்து ரூ.47 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 வழக்குகளைப் பதிவு செய்து, தமிழக சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…