Categories: இந்தியா

கூட்டாக இணைந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்த இந்திய மற்றும் வங்கதேச பிரதமர்கள்.!

Published by
செந்தில்குமார்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கூட்டாக  இணைந்து இன்று நடைபெற்ற  மெய்நிகர் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம், அகௌரா-அகர்தலா குறுக்கு-எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் என்கிற மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளனர்.

இதில் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் ஆனது ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானியத்துடன் வங்கதேசம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இணைப்பின் நீளம் 12.24 கிமீ ஆகும். இதில் வங்கதேசத்தில் 6.78 கிமீ மற்றும் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 5.46 கிமீ இரட்டை ரயில் பாதையும் அடங்கும். டாக்கா வழியாக அகர்தலா மற்றும் கொல்கத்தா இடையேயான பயண நேரத்தை சிறிது குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதைத் திட்டம் ஆனது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சலுகைக்கடன் மூலம், 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் மோங்லா துறைமுகம் மற்றும் வங்கதேசத்தின் குல்னா பகுதியில் தற்போதுள்ள ரயில் நெட்வொர்க்குக்கு இடையே கிட்டத்தட்ட 65 கிமீ அகல ரயில் பாதை அமைக்கும் பணியும் அடங்கும்.

இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா, நாட்டின் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் மூலம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டு வரும், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் அனல் மின் நிலையம் ஆகும்.

இந்தத் திட்டம் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் மற்றும் பங்களாதேஷ் பவர் டெவலப்மெண்ட் போர்டு ஆகியவற்றுக்கு இடையே உள்ள கூட்டு நிறுவனமான பங்களாதேஷ்-இந்தியா நட்பு பவர் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று வளர்ச்சித் திட்டங்களும் நாட்டில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

25 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

3 hours ago