கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது இரண்டாவது தனியார் மருத்துவமனையாகும்.
இதற்கு முன் டெக்கான் மருத்துவமனை என்ற மருத்துவமனை இதேபோன்ற புகார்களுக்காக கடந்த திங்களன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை இழந்தது. கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மூலம் அதிக புகார்கள் வந்தால் தனியார் மருத்துவமனைகள் இதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…