Priyanka Gandhi [Image source : PTI]
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளதால் தற்போதே தேர்தல் பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சி ஆரம்பித்து விட்டன. காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறுகையில், பாஜக ஆட்சியில் மாதந்தோறும் ஒரு ஊழல் பட்டியல் வெளியாகி வருகிறது. 220 மாதங்களில் 225 ஊழல்கள் வெளிப்பட்டு உள்ளன. நிலக்கரி சுரங்கம், கொரோனா காலகட்டத்தில் மருத்துவ ஊழல் என கூறி, அடுத்ததாக தேர்தல் வாக்குறுதிகளை கூறினார்.
மத்திய பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும், வீட்டு பயன்பாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் எனவும், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…