பணமோசடி வழக்கு.. குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்..!

Published by
murugan

தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், ஹரியானாவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்திவுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் , தொழிலதிபர் சஞ்சய் பண்டாரியின் கூட்டாளியாகக் கூறப்படும் சிசி தம்பி, 2005 முதல் 2008 வரை ஹரியானாவில் உள்ள அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை டெல்லி ரியல் எஸ்டேட் முகவரான எச்எல் பஹ்வா மூலம் வாங்கினார்.

அதே நேரத்தில் ராபர்ட் வத்ராவும் 2005-2006ல் எச்.எல் பஹ்வாவிடமிருந்து அமிபூரில் 4 ஏக்கர் அளவுள்ள நிலத்தை வாங்கி, அதே நிலத்தை 2010 டிசம்பரில் எச்.எல் பஹ்வாவுக்கு விற்றுள்ளனர். நிலம் வாங்கியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய பின்னணியில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அமலாக்கத்துறை குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்கத்துறை, சிபிஐ பயன்படுத்தப்படுவதாக நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். பிரியங்கா காந்தி வத்ராவின் முழுமையான வழக்கு எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படும் விதம் முற்றிலும் தவறானது என தெரிவித்த்துள்ளார்.

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago