தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது , சிவா , நவீன் , சின்னகேஷ்வலு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பெரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு மக்கள் பலர் தெலுங்கானா போலீசாரை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் பிரியங்கா தந்தை ANI-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் , எனது மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. என்கவுண்டரில் நான்கு பேரை கொல்லப்பட்டது எனக்கு நிம்மதியை தருகிறது.அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும் என கூறினார்.
என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது. இது மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கட்டும். தெலுங்கானா போலீஸ் வேகமாக செயல்பட்டு உள்ளது.போலீசாருக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான்.
மீடியா அவர்களால் தான் இந்தியா முழுவதும் இந்த கொலை சம்பவத்தை கொண்டு சென்றனர். எனவே மீடியா அவர்களுக்கு மிக்க நன்றி என பிரியங்கா தந்தை கூறியுள்ளார்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…