ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., வகையில், 50வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி- சி48 என்ற ராக்கெட்டை, நாளை அதாவது டிசம்பர் 11 அன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்களை கண்டறிதல்,தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் உதவியுடன், செயற்கை கோள்களை விண்ணில் நிலை நிறுத்துகிறது. தற்போது,இந்திய எல்லை பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்க்கொள்வதற்க்காக, 628 கிலோ எடை கொண்ட ‘ரிசாட் – 2 பி.ஆர்.,1’ என்ற, அதிநவீன செயற்கை கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இது முதல் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி48ராக்கெட், நாளை மதியம், 3:25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.இதில், ‘ரிசாட் -2 பி.ஆர்., 1’ செயற்கைகோளுடன், இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய ஒவ்வொரு நாடுகளின்,ஒரு செயற்கைகோளும் ஐக்கிய அமெரிக்காவின் ஆறு செயற்கை கோள்களும், வணிக ரீதியில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளன.இந்த் பயணம் பிஎஸ்எல்வி யின் ஐம்பதாவது பயணம் ஆகும்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…