கர்நாடக மாநிலத்தின் பொது நுழைவுத் தேர்வு ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாகவே எஸ்எஸ்எல்சி தேர்வு நடக்கும் பொழுதே பொது நுழைவுத் தேர்வையும் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதல்வரும் உயர் கல்வி அமைச்சருமான டாக்டர் அஸ்வத் நாராயணன் அவர்கள் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் தற்பொழுது வருகின்ற ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பொது நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 497 மையங்களிலும் 120 இடங்களிலும் 1.95 லட்சம் மாணவர்கள் இந்த பொது நுழைவுத் தேர்வை எழுத உள்ளார்கள் என்று ஒரு அறிக்கையில் நாராயணன் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நான்கு நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் நடைபெறும் எனவும் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கான அறிகுறியுள்ள மாணவர்களுக்கும், தனி அறை கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கபடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அனைத்து சோதனைகள் உடன் கூடிய தேர்வு எழுதுவதால் மாணவர்கள் பீதி அடைய தேவையில்லை எனவும் சமூக இடைவெளிகளை கடைபிடித்து அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுடன் கலந்துகொண்டு தேர்வுகளை நன்முறையில் எழுதி செல்லலாம் எனவும் டாக்டர் நாராயணன் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…