புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சித்த மருத்துவ முறையைப் கற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணா ராவ் உடன் சேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க விரைவில் சித்த பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். ஏன்னென்றால் உள்நாட்டு சிகிச்சை முறை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்கள் சிகிச்சைக்காக சித்த அமைப்பை நாடுகின்றன. இதனால் நாங்கள் அதைப் பின்பற்றி சித்தா முறையை பின்பற்றுவதற்கான செயல் திட்டத்தை உருவாக்க பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தயிருக்கிறோம் என முதல்வர் கூறினார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதாகக் கூறிய அவர் மீட்பு விகிதம் இப்போது 56 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. இருந்தாலும் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிறோம். மேலும் ஒரு அதிகமான மாதிரிகளின் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
கொரோனா பரவாமல் தடுக்க கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் உள்ளன என்றார். மேலும் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஆஷா பிரிவு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த பணி உள்ளது என்று அவர் கூறினார்.
சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு…
சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…
சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…