அதிர்ச்சி சம்பவம்..!கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியரை வேலைக்கு வர கட்டாயப்படுத்திய பிரபல வங்கி..!

Published by
Edison

ஜார்கண்ட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியானது,கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது ஊழியரை வேலைக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின்,போகாரோவில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் அரவிந்த் குமார் என்பவர்,கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இதனால்,கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

இருப்பினும்,அவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் ஆக்ஸிஜன் உதவியுடன் இருந்து வருகிறார்.அதனால்,மெடிக்கல் லீவ் வேண்டுமென்று அரவிந்த் குமார் வங்கியில் தெரிவித்தார்.ஆனால்,வங்கி அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து,பணிக்கு வருமாறு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.

இதன்காரணமாக,அரவிந்த் குமார் தனது ராஜினாமா கடித்ததை சமர்ப்பித்தார்.எனினும்,வங்கி அதிகாரிகள் அதையும் நிராகரித்தனர். மேலும்,அவரது சம்பளத்தை குறைப்பதாகவும்  பயமுறுத்தியுள்ளனர்.

இதனால்,வேறு வழியில்லை என்பதால்,அரவிந்த் குமார் ஆக்ஸிஜன் உதவியுடன் கடந்த திங்களன்று பணிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில்,அரவிந்த் குமாருடன் வங்கிக்கு வந்த அவரது குடும்பத்தினர்,உடல்நிலை சரியில்லாத அவரால் வேலை செய்ய முடியாது.எனவே அவருக்கு மெடிக்கல் லீவ் வேண்டுமென்று  கெஞ்சியுள்ளனர்.இதனையடுத்து,வங்கி அதிகாரிகள் அரவிந்த் குமாருக்கு மெடிக்கல் லீவ் கொடுத்து,வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.

எனினும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை வேலைக்கு வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Edison

Recent Posts

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும்…

8 minutes ago

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

10 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

11 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

12 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

12 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

13 hours ago