Categories: இந்தியா

எனது ஒற்றுமை யாத்திரைக்கு அவர்தான் காரணம்.. ராகுல் காந்தி உருக்கமான வீடியோ.!

Published by
மணிகண்டன்

ஆந்திர பிரதேசம்: நான் மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரைக்கு மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தான் காரணம் என ராகுல் காந்தி வீடியோ மூலம் கூறியுள்ளார்.

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அவர்களின் பிறந்த தினம் இன்று (ஜூலை 8) கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் நீண்ட வருடத்திற்கு பிறகு நிலையான ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருந்தவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்று ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாள். அவர் உண்மையான மக்கள் தலைவர். ஆந்திர மக்களுக்காக பிறந்தவர். ஆந்திர மக்களுக்காக வாழ்ந்தவர். ஆந்திர மக்களை நம்பியவர்.

நாம் அவரை இழந்து இருப்பது சோகம். அவர், இன்று இருந்திருந்தால் ஆந்திரப் பிரதேசம் முற்றிலும் மேம்பட்டு இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அவரிடம் இருந்த அதே உணர்வு, உறுதிப்பாடு, பாசம் மற்றும் அன்பு ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளாவுக்கும் (ஆந்திர பிரதேச காங்கிரஸ் தலைவர்)  உண்டு. நான் ஒய்எஸ்.ராஜசேகர ரெட்டியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நான் மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரை அவரது யாத்திரையால் ஈர்க்கப்பட்டது என்று வீடியோவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2004 ஆந்திர மாநில தேர்தலுக்கு முன்னர், 2003ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் சுமார் 1500 கிமீ யாத்திரை மேற்கொண்டார். சுமார் 3 மாதங்கள் இந்த யாத்திரையை ராஜசேகரரெட்டி நடத்தினார். இதன் பலனாக 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வரானார். துரதஷ்டவசமாக செப்டம்பர் 2 2009இல் விபத்தில் உயிரிழந்தார். அதன் பிறகு 2011இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி என அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

உங்களுக்கு 50 நாள் டைம் போரை நிறுத்தலைனா வரி தான்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

வாஷிங்டன் : 2025 ஜூலை 14 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க்…

31 minutes ago

“நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்”…காமராஜர் பிறந்தநாள் – முதல்வர் புகழாரம்!

சென்னை : ஜூலை 15 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான காமராஜர் பிறந்த நாள்…

1 hour ago

INDvsENG :3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி! இந்தியா தோல்விக்கான முக்கிய காரணங்கள்!

லண்டன் : 2025 ஜூலை 10 முதல் 14 வரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட்…

2 hours ago

இன்று, நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

பூமிக்கு புறப்பட்டது சுபன்ஷு சுக்லா குழு! இன்று பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கும்!

2025 ஜூலை 14 அன்று, இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள்,…

3 hours ago

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

12 hours ago