ஹத்ராஸ் மாவட்டத்தில் 4 இளைஞர்களால் 19 -வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, இரண்டு நாள்கள் முன் உயிரிழந்த ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் சென்றனர். அப்போது, உத்தரபிரதேச போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், உ.பி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஹத்ராஸுக்கு மீண்டும் இன்று புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நொய்டா-காசியாபாத் மற்றும் ஹத்ராஸ் வரை உ.பி போலீசார் எச்சரிக்கையாக உள்ளது. டெல்லி, நொய்டாவுடன் இணைக்கும் சுங்கச்சாவடி மூடப்பட்டு ஏராளமான போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
ஏராளமான பெண் போலீஸ்காரர்களும் , பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமை மோசமடைவதைத் தடுக்க மூத்த காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உள்ளனர். மேலும், காஜியாபாத் வழியாக ராகுல் ஹத்ராஸை அடைவார் என்ற அச்சம் காரணமாக உ.பி. கேட்டில் காவல்துறையினர் உள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…