பெங்களூரு: கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் சமயத்தில், அப்போதைய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்ததது. மே 5, 2023இல் வெளியான பல்வேறு செய்தித்தாள்களில் 2019 முதல் 2023 வரை பாஜக பல்வேறு ஊழல்களை செய்துள்ளது என்றும், பசவராஜ் பொம்மை அரசு 40 சதவீத கமிஷன் அரசு என கடுமையாக விமர்சித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விளம்பரங்களை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தனர். காங்கிரஸ் மேற்கொண்ட இந்த பிரச்சாரம் குறித்து கர்நாடகா பாஜக அவதூறு புகார் அளித்தனர். பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.என்.சிவகுமார் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் வேளையில், முன்னதாக கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.
இதனை அடுத்து, ஜூன் 7ஆம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் படி, பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டார் ராகுல் காந்தி.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…