காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை ராகுல்காந்தி அவர்கள் ராஜினாமா செய்யக்கூடாது என்றும் அவர் ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தின் எதிரே இருக்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் ராகுல்காந்தி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். அப்படி போராடி வந்த தொண்டர் ஒருவர் மரத்தில் தூக்கு போட்டு திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு அவரை காப்பற்றியுள்ளனர். அப்போது அவர், ராகுல் காந்தி அவர்கள் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நன் எனது உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…