தேசத்தை திசை திருப்பவே மக்களை பிளவு படுத்துகிறார் மோடி.. ராகுல் காந்தி ஆவேச கருத்து மற்றும் சவால்..

Published by
Kaliraj
  • தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்த ஆலோசனை கூட்டம் தலைநகர்  டெல்லியில் இன்று நடைபெற்றது.
  • இதில் ராகுல்காந்தி கூறிய கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், ராகுல்காந்தி, குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சீதாராம்  யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட  20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்ததாவது,

Image result for மோடி

இந்திய பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி மாணவர்களிடம் பிரதமர் மோடி நிச்சயமாக விளக்கமளிக்க  வேண்டும்.நமது பிரதமர், இந்தியாவின் தூண்களான இளைஞர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்க்கு  பதிலாக தேசத்தை திசைதிருப்பவும் மக்களை தங்களுக்குள் பிளவுபடுத்தவும் பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்றும், இளைஞர்களின் கருத்தை  அடக்கக்கூடாது அதை  அரசு கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு முன்னால் நிற்க பிரதமருக்கு துளியும் தைரியம் இல்லை.

எதாவது ஒரு பல்கலைக்கழகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் தனியாக சென்று இந்த நாட்டிற்கு என்ன செய்கிறார், இனி என்ன செய்யப் போகிறார் என்று உரையாட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார். இவரது இந்த சவால் தற்போது டெல்லி வட்டாரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்.! திரைப்பிரபலங்கள் இரங்கல்…

டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…

17 minutes ago

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…

1 hour ago

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…

2 hours ago

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

2 hours ago

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…

3 hours ago

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

3 hours ago