தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு.
தொழில்நுட்பம் இல்லாத பிரிவுகள், லெவல் 1 தேர்வு முடிவுகளை இறுதி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்ததாக பீகாரில் தேர்வர்கள் போராட்டம் நடத்தியதால் ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. முறைகேடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15-ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, பிகார் மாநிலம் கயாவில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயிலுக்கும் தீ வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ”சிபிடி 2 தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இது குறித்த எந்தவித புதிய தகவலும் இல்லை. முடிவுக்காக காத்திருக்கிறோம். எனவே தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்று . கயாவில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரயில்வே தேர்வு வாரியத்தின் NTPC தேர்வில் உள்ள முரண்பாடுகளைக் கண்டித்து பீகாரில் தேர்வுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்வர்களின் தொடர் போராட்டம் காரணமாக NTPC & ரயில்வே தேர்வு வாரியத்தின் நிலை-1 தேர்வுகளை நிறுத்தி வைப்பதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…