ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக ராஜஸ்தானில் ஏராளமான விவசாயிகள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும். இதை வலியுறுத்தியே வெட்டுக்கிளி நிரம்பிய கூடையுடன் வந்துள்ளேன்,’’ என்றார். இது குறித்து கருத்து தெரிவித்த வேளாண் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்குவதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சுமார் `3.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளது. சேதமடைந்துள்ள பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…