இன்று கூடுகிறது ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம்

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டு இருந்த சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு சச்சின் பைலட் கடந்த செவ்வாய் கிழமை ஜெய்ப்பூருக்குத் திரும்பினார்.
ஜெய்ப்பூருக்குத் திரும்பிய பின்னர் சச்சின் பைலட் முதல் முறையாக முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து பேசினார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ் தலைமையிலான முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியான பாஜக முடிவு செய்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
June 21, 2025
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025